கோவையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏற்பாடு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினைப் பெற ஏதுவாக தங்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், படிவம் - 12D மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (மார்ச்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால், 18-வது மக்களவைப் பொதுத் தேர்தல், 2024 பத்து (10) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் மேற்பட்ட வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நேர்வில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினைப் பெற ஏதுவாக தங்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth lever Officer), படிவம் - 12D மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருகை தருவார்கள். அவ்வாறு தங்களது இல்லங்களுக்கு வருகை தரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தினை படித்துப் பார்த்தும்/ படிக்கக் கேட்டும், ஆதாரங்கள் ஏதும் கோரும் பட்சத்தில் அதன் நகலினை சமர்ப்பித்து, ஒப்பம் மாவட்ட நிர்வாகத்திற்கு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அஞ்சல் வழியில் வாக்களிப்பது தொடர்பான, தங்களது விருப்பத்தினை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமையப்பெற்றுள்ள எண். 20, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்குரிய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் மற்றும் எண். 21, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குரிய தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திலும் அல்லது தங்களது பகுதிக்குட்பட்ட உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் (வட்டாட்சியர் அலுவலகம்) அலுவலகத்திற்கோ நேரில் சென்று (24.03.2024)-க்குள் படிவம் 12D-யினை, இதற்காக பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து சமர்ப்பித்து எதிர்வரும் மக்களவைத் தேர்தலை, சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்திட தக்க ஒத்துழைப்பு நல்கிடுமாறு மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...