பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க நீதிமன்றத்தில் தடையாணை பெற தவறிய தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்


கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து கோவையில் பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும், கேரள அரசு கட்டுமான பணிகளை நடத்தி வருகிறது.

இதனிடையே தேக்குவட்டை பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மஞ்சக்கண்டியிலும் தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு துரிதப்படுத்தியுள்ளது.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறத் தவறிய தமிழக அரசை கண்டித்து, கோவை சிவானந்தா காலணி பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கலந்து கொண்டன. இப்போராட்டத்தில், கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறி விட்டதாகவும், கேரள அரசிற்கு சாதகமாக தமிழக அரசு நடந்து கொண்டதால் தொடர்ந்து கேரள அரசு தடுப்பணை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

பவானி தடுப்பணை விவகாரம் தொடர்பாக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...