பீளமேட்டில் தொழிலதிபர் வீட்டில் 177 பவுன் நகை, ரூ.9 லட்சம் பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை

பீரோவில் வைத்திருந்த 177 பவுன் தங்க நகை மற்றும் ரூ.9.75 லட்சம் கொள்ளை போயிருப்பது கண்டு தொழிலதிபர் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு செங்காளியப்பாநகரை சேர்ந்தவர் மனோகரன்(64). தொழில் அதிபர். இவரது மனைவி திருச்சியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர்களை பார்ப்பதற்காக கடந்த மாதம் 23ம் தேதி திருச்சி சென்ற மனோகரன் அங்கு தங்கினார். இதற்கிடையே நேற்று (மார்ச்.14) அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உடனே மனோகரனை செல்போனில் தொடர்புகொண்டு விவரத்தை கூறினர். உடனே மனோகரன் திருச்சியில் இருந்து கோவை திரும்பி தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு வீட்டில் இருந்த உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

பீரோ திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த 177 பவுன் தங்க நகை மற்றும் ரூ.9.75 லட்சம் கொள்ளை போயிருப்பது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் சில நாட்களாக ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மனோகரன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் கொள்ளையர்கள் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...