ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சேர்க்காமல் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மட்டுமே காயம் அடைந்தவர்களை அழைத்துச் செல்வதாக கூறி, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். கடந்த இரண்டு மாத காலமாக விபத்து ஏற்படும் சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்லும் 108 அவசர ஊர்தி வாகன ஓட்டுனர்கள் விபத்தில் காயமடைந்த நபர்களை அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லாமல், 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட ஒரு தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

குறிப்பிட்ட மருத்துவமனையில் மட்டும் வாரத்துக்கு 60 நோயாளிகள் இதுபோன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சேர்க்காமல் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என வாய்மொழி உத்தரவு உள்ளதாக 108 ஆம்புலன்சில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.



இதனால் உயிர் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் அனைத்து விதமான மருத்துவ வசதிகளுடன் இருக்கக்கூடிய நிலையில், வேறு எந்த மருத்துவமனைகளுக்கும், விபத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்காமல், வளையன்காடு பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மட்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜீடம், திருப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...