மடத்துக்குளம் அருகே பாஜகவினர் போராட்டம் - திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரேக்ளா பந்தயம் ரத்து

மைவாடி பிரிவு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் ரேக்ளாழ பந்தயம் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அனுமதி இல்லாமல் பந்தயம் நடத்துவதாக கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த மைவாடி பிரிவு பகுதியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற இருந்தது.



இந்த நிலையில் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படுவதாக தகவல் அறிந்த மடத்துக்குளம், உடுமலை பகுதி பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரேக்ளா பந்தயம் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் சுகுமாரன் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் மற்றும் பாஜக நிர்வாகிகள் 14 பேரை கைது செய்தனர்.

மேலும் பாஜகவினர் கூறுகையில், திமுக சார்பில் நடத்தப்படும் ரேக்ளா பந்தயம் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படுகின்றது. எனவே முறையான அனுமதியோடு நடத்தப்பட வேண்டும். காவல்துறையினர் ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி வழங்கினால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் தெரிவித்தனர்.



இந்த நிலையில் ரேக்ளா பந்தயம் நடத்த பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணமாக திமுக சார்பில் நடைபெற இருந்த ரேக்ளா பந்தயம் ரத்து செய்யபட்டதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.



உடுமலை அருகே திமுக சார்பில் நடைபெற இருந்த ரேக்ளா பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...