மடத்துக்குளம் அருகே பாஜகவினர் போராட்டம் - திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரேக்ளா பந்தயம் ரத்து

மைவாடி பிரிவு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் ரேக்ளாழ பந்தயம் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அனுமதி இல்லாமல் பந்தயம் நடத்துவதாக கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த மைவாடி பிரிவு பகுதியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற இருந்தது.



இந்த நிலையில் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படுவதாக தகவல் அறிந்த மடத்துக்குளம், உடுமலை பகுதி பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரேக்ளா பந்தயம் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் சுகுமாரன் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் மற்றும் பாஜக நிர்வாகிகள் 14 பேரை கைது செய்தனர்.

மேலும் பாஜகவினர் கூறுகையில், திமுக சார்பில் நடத்தப்படும் ரேக்ளா பந்தயம் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படுகின்றது. எனவே முறையான அனுமதியோடு நடத்தப்பட வேண்டும். காவல்துறையினர் ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி வழங்கினால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் தெரிவித்தனர்.



இந்த நிலையில் ரேக்ளா பந்தயம் நடத்த பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணமாக திமுக சார்பில் நடைபெற இருந்த ரேக்ளா பந்தயம் ரத்து செய்யபட்டதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.



உடுமலை அருகே திமுக சார்பில் நடைபெற இருந்த ரேக்ளா பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...