நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணிக்கு ஆதரவு – திருப்பூரில் பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேட்டி

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் தெரிவித்து இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் விளக்கமளித்துள்ளார்.


திருப்பூர்: அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் கர்ணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பெயரில் முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் எடுத்த முடிவு தன்னிச்சையான முடிவு என்றும், ஆனால் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தமிழகத்தில் உள்ள நிர்வாகிகள் பெரும்பாலானோர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும், கதிரவனின் முடிவு என்பது தன்னிச்சையான முடிவு. அது ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் முடிவு அல்ல என்றும் தெரிவித்தார். மேலும் ஓரிரு நாட்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பார்வேர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு சீட்டு கேட்டு பெறப்போவதாகவும், கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அரசு 68 ஜாதினருக்கு எதிராக பத்து புள்ளி ஐந்து சதவீதம் கொண்டு வந்தது. அதனால் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக முதல்வரை சந்திக்கும் பொழுது டிஎன்பி என்ற ஒற்றைச் சான்று முறையை கொண்டுவர வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய செயலாளரும் மாநில பொருளாளருமான சுரேஷ் பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முக்குலத்தோர் சமுதாயம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிகழ்வு என்பது முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே ஆறாத காயமாக உள்ளதாகவும் ஆகையால் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை அனைத்து மாவட்ட செயலாளர் அவர்கள் மாநில பொறுப்பாளர்கள் ஒற்றைக் கருத்துடன் ஆதரித்து உள்ளதாகவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் மாநில பொருளாளருமான சுரேஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...