நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், வாக்குப்பதிவு தொடர்பான நடைமுறை, வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள 288 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கோவை காந்திபுரம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று (மார்ச்.9) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் இந்த வகுப்பு நடைபெற்றது.



இந்த பயிற்சி வகுப்பில் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், வாக்குப்பதிவு தொடர்பான நடைமுறை, முதன்மை வாக்குப் பதிவு (Presiding Officers) அலுவலர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



இப்பயிற்சி வகுப்பினை தனித் துணை ஆட்சியர்( சமூகப் பாதுகாப்பு திட்டம்) சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் அலுவலர்களுக்கு பயிற்சியினை வழங்கினர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...