தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 3 மாதம் சம்பளம் வழங்க கோரி உடுமலை குட்டைதிடல் பகுதியில் பெண்கள் போராட்டம்

100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கி முழுமையாக வழங்க வேண்டும் என சர்வதேச மகளிர் தினத்தன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு குடை பிடித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டைதிடல் பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில் 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கி முழுமையாக வழங்க வேண்டும் என சர்வதேச மகளிர் தினத்தன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு குடை பிடித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாடுபட்ட தொழிலாளியை பட்டினி போடாதே, சம்பளத்தை உடனே வழங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டது.



அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உடுமலை ஒன்றிய தலைவர் ரங்கராஜ், சிபிஐஎம் கனகராஜ், சிஐடியூ செயலாளர் ஜெகதீசன் மற்றும் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது மேலும் இரண்டு நாளில் சம்பளம் வழங்கப்பட விட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய தொழிலாளர் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...