தமிழக பிசியோதெரபி மருத்துவ கவுன்சில் உருவாக்க வேண்டும் என தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மாநாட்டில் தீர்மானம்

கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளும் சட்ட ரீதியான அணுகுமுறையும் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர். ராஜா செல்வகுமார் மாநாட்டை தொடங்கி வைத்து வரவேற்று பேசினார்.


அதனைத் தொடர்ந்து மாநாடில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் பிசியோதெரபி மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் டாக்டர் ஐன்டீன் கலந்து கொண்டு பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்தும் அதனை சரி செய்யும் சட்ட ரீதியான அணுகு முறைகள் குறித்தும் விவாதித்தார்.

இதனைத்தொடர்ந்து பிசியோதெரபி மருத்துவத்தை ஆவனபடுத்தும் முறை குறித்து டாக்டர். ராம் பிரகாஷ் உரையாற்றினார். இதில் தமிழக பிசியோதெரபி மருத்துவ கவுன்சில் உருவாக்க தமிழக அரசை வலியுறுத்துவது, ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிசியோதெரபி சிகிக்சையை சேர்க்க வலியுறுத்துவது, பிசியோதெரபி மருத்துவர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.



மாநாட்டில் பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பணியாற்றிய சென்னையை சேர்ந்த டாக்டர் ஹரிஷ் குமார்-க்கு டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் நினைவு விருதும், ஈரோட்டை சேர்ந்த டாக்டர். விஜயராஜ்-க்கு பிசியோ எக்சலென்சி விருதும் வழங்கி கௌரவிக்கபட்டனர்.

இறுதியாக பிசியோதெரபி மருத்துவம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் வெளியிடப்பட்டது. நிறைவாக கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர்.ராஜேஷ் கண்ணா நன்றி தெரிவித்தார்

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...