கோவையில் கனிம வளங்களை அனுமதியின்றி எடுத்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் கிராவல் மண், செம்மண் உள்ளிட்ட கனிம வளங்களை அனுமதியின்றி வெட்டி எடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (மார்ச்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, பேரூா் வட்டத்துக்குட்பட்ட தொண்டாமுத்தூா், வெள்ளிமலைப்பட்டிணம், விராலியூா், தேவராயபுரம், வெள்ளருக்காம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலையடிவாரங்களில் கிராவல் மண், செம்மண் அனுமதியின்றி வெட்டி எடுப்பதாக புகார்கள் வந்துள்ளன.

கனிம வளங்களை முறையற்ற வகையில் வெட்டி எடுப்பதைத் தடுக்க வட்ட அளவில் ‘டாஸ்க் போலீஸ்’ ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இதில், வருவாய்த் துறையினா், காவல் துறையினா், வனத் துறையினா், கனிம வளத் துறையினா், பொதுப் பணித் துறையினா் உள்ளனா்.

தேவராயபுரத்தில் 3,121 க.மீ. மண் அனுமதியின்றி வெட்டி எடுத்த நில உரிமையாளா் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள புவியியல், சுரங்கத் துறை துணை இயக்குநா் ரமேஷ், கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதனுக்கு மார்ச் 1 -ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டில் அனுமதியின்றி மண் எடுத்ததற்காக 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 59 வாகன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முறையற்ற வகையில் மண், கல் எடுத்ததற்காக கனிம வளத் துறையினா் அறிக்கையின்பேரில், நில உரிமையாளா்கள் மீது பொள்ளாச்சி சார் ஆட்சியரால் ரூ.34.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதித்த அளவுக்கு கூடுதலாக மண் எடுத்துச் சென்றதாக 190 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கிராவல் மண், செம்மண் உள்ளிட்ட கனிம வளங்களை அனுமதியின்றி வெட்டி எடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...