நீர்நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.03.2017) மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சுத்தமாகவும், பேணிபாதுகாப்பது மிக அவசியமாகும். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளோடு பொதுமக்களும் கைகோர்த்து நீர்நிலைகளை பேணிகாப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நீர்நிலைகளில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவது, பிளாஸ்டிக்கழிவுகள் மற்றும் திட, திரவுக்கழிவுகள் கொட்டுவதென்பது தடுக்கப்பட வேண்டும். மேலும், அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் விதிகளின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், பொதுமக்கள் தங்களது பட்டா நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறுபவர்களின் மீது அவற்றிற்குண்டான அபாராதம் விதிக்கப்படும். தமிழக அரசு, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கோவை மாவட்டத்திலுள்ள குளங்கள் தூய்மை படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. எனவே, பொதுமக்களும் குளங்களை பாதுகாக்கும் மற்றும் தூய்மைபடுத்தும் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம், பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...