ஊதியூர் பெட்ரோல் பங்க் நிறுத்தம் அருகே பள்ளி மாணவன் பேருந்தில் இருந்து விழுந்து படுகாயம்

பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது உள்ளே இருந்து, படிக்கட்டிற்கு வந்த மாணவன் திடீரெனெ நிலை தடுமாறி பேருந்தில் இருந்து சாலையில் விழுந்துள்ளார். இதில் மாணவனுக்கு தலை, முகம், மூக்கு, கை ஆகிய பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த குள்ளம்பாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. ஊதியூர் பகுதியை சேர்ந்த சண்முகம் கூலித்தொழிலாளியின் மகன் அபிஷேக்குமார் வயது 16. இந்த சிறுவன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இன்று மாலை பள்ளி வேலை முடிந்தவுடன் காங்கேயம் பேருந்து பணிமனைக்கு சொந்தமான K5 என்ற பேருந்தில் குள்ளம் பாளையத்தில் இருந்து ஊதியூர் பெட்ரோல் பங்க் ஸ்டாப்பில் இறங்கி வீடு செல்வது வழக்கம்.

அதே போல் இன்றும் அந்த பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது படிக்கட்டிற்கு வந்துள்ளார். பின்னர் திடீரெனெ படிக்கட்டில் நிலை தடுமாறி சாலை விழுந்துள்ளார். உடனே சகமாணவர்கள் சத்தமிடவே பேருந்தை நிறுத்தி பார்க்கையில் மாணவனுக்கு தலை, முகம், மூக்கு, கை ஆகிய பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டிருந்தது. வலியால் மாணவனும் துடிக்க அருகில் இருந்தவர்கள் அந்த வழியாக வந்த வாகனத்தில் ஏற்றி காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பேருந்தில் செல்லும் மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நின்ற பின்னரே படிக்கட்டு பகுதிக்கு வரவேண்டும் அதற்க்கு முன்னாள் படிக்கட்டிற்கு வந்தால் கை தவறியோ அல்லது படிக்கட்டுகள் வலுக்கிவிட்டு இதுபோல் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

அதே போல் பேருந்து நடத்துனர்கள் மாணவர்களை படிக்கட்டுக்களில் நிற்பதை அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...