சிறந்த ஸ்டார்ட்அப் இன்குபேட்டராக ஏஐசி ரைஸ் தேர்வு - நிதி மற்றும் பரிசினை வழங்கினார் அமைச்சர் டி.எம்.அன்பரசு

சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் டி.எம். அன்பரசு வழங்கிய நிதி மற்றும் பரிசினை, ஏஐசி ரைஸின் சார்பாக ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் மற்றும் இன்குபேஷன் பிரிவின் மேலாளர் பிரதீப் ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



சென்னை: ஸ்டார்அப் தமிழ்நாடு அமைப்பானது மாநிலம் முழுவதும் சிறந்த இன்குபேட்டர்களை அங்கீகரிக்க நடத்திய ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்குபேட்டர்களுக்கு நிதியினை வழங்கி கௌரவித்தது. இதில் சிறந்த ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் வரிசையில் ஏஐசி ரைஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதற்கான நிதி மற்றும் பரிசினை தமிழ்நாட்டின் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் டி.எம். அன்பரசு வழங்கினார். இதில் ஏஐசி ரைஸின் சார்பாக ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் மற்றும் இன்குபேஷன் பிரிவின் மேலாளர் பிரதீப் ராஜ் ஆகியோர் நிதியினைப் பெற்றனர். இந்நிதியானது ஏஐசி ரைஸின் உள்கட்டமைப்பு மற்றும் ஏஐசி ரைஸின் ஸ்டார்ட்அப்களின் மேலாண்மைக்காக பயன்படுத்தப்படும் என ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு இயக்கனர் சிவராஜ் இராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...