உடுமலை அருகே கிராமப்புறங்களில் நாய் கடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்- அரசு மருத்துவமனையில் அனுமதி

பெரிய வட்டாரம், கழுகரை, ஐஸ்வர்யா நகர், போத்த நாயக்கனூர், சால்ரப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு வெறிநாய்கள் துரத்தி கடித்ததில் குழந்தைகள், பெரியவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளான பெரிய வட்டாரம், கழுகரை, ஐஸ்வர்யா நகர், போத்த நாயக்கனூர், சால்ரப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பொதுமக்களை அப்பகுதிகளில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் துரத்தி கடித்ததில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த நிலையில் தற்பொழுது பாதிக்கப்பட்ட அனைவரும் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...