ஒப்பணக்கார வீதியில் கூடிய விரைவில் பெலிக்கன் சிக்னல் - மாநகர காவல் ஆணையர் தகவல்

ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பூத் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்ற சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவலர்கள் வெயில் காலத்தில் சிரமமின்றி பணி புரிவதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய, டிராபிக் பூத் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்த பூத்தில் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையாளர், கோவை மாநகரில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பெலிக்கன் சிக்னல்களை பொருத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



அதன் தொடர்ச்சியாக இந்த பூத் அமைத்துக் கொடுத்த பிரகாஷ் ஏஜென்சி செந்தில்குமார் மேலாளர் ஒத்துழைப்போடு ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பூத் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்ற சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கூடிய விரைவில் ஒப்பணக்கார வீதி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பெலிகன் சிக்னல்களை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இது போன்ற குளிர்சாதன வசதி உடைய பூத்துகள் தொடர்ச்சியாக திறந்து வைக்கப்பட இருப்பதாகவும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...