ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியும் ஸ்ரீ ராம்ஸ் வாலிபால் அகாடமியும் இணைந்து வாலிபால் வீரர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 5, 6ம் தேதிகளில் நடைபெறவுள்ளது

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியும் ஸ்ரீ ராம்ஸ் வாலிபால் அகாடமியும் இணைந்து நடத்தும் வாலிபால் வீரர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணி அளவில் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லாரியில் உள்ள வாலிபால் மைதானத்தில் அர்ஜுனா மற்றும்  துரோணச்சார்யா விருது பெற்ற இந்திய சீனியர் வாலிபால் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ஜி.இ.ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் சர்வதேச வாலிபால் வீரர் வி.சி.ராமலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

வாலிபால் தேர்வுக்கு வரும் வீரர்கள் பிளஸ்-2 தேர்ச்சியடைந்த அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படித்த அல்லது இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்ற மாணவர்ககளாக இருத்தல் வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்களின் குறைந்தபட்ச உயரம்190 செ.மீ. ஆகும்.

வாலிபால் அகாடமியில் தேர்வு பெறும் வீரர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா காலைக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு, வாலிபால் விளையாட்டுக்குரிய அனைத்துவகை சீருடை, உணவு, இருப்பிடம் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

வாலிபால் தேர்வுக்கு வரும் வீரர்களுக்கு ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக கல்லூரி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாலிபால் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள இளம் வீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கல்லூரியின் முதல்வர் பெ. பாபா ஞானக்குமார் மற்றும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஆர்.சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

மேலும் தகவலுக்கு தொடர்புக்கு் 09894170112  அல்லது 09894648915 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது [email protected][email protected] என்னும் இணையதள முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...