ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்

அருளாளி பூப்பந்தை உருட்டி முதலில் குண்டம் இறங்கியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழகம் மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் குண்டம் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு திருவிழா கடந்த பிப்ரவரி 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து முக்கிய பூஜையான மயான பூஜை கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. முக்கிய விழாவான பக்தர்கள் தீ மிதித்து குண்டம் இறங்குதல் நிகழ்வு நேற்று காலை தொடங்கியது.

இதற்காக 41 அடி நீளமுள்ள குண்டம் தயார் செய்யப்பட்டு உப்பாற்றங்கரையில் இருந்து கோவில் அருளாளி உள்ளிட்ட முறைதாரர்கள் ஆபாரண பெட்டி, திரிசூலத்தை தாரை தப்பட்டை ஆபரண மேளதாளங்கள் முழங்க குண்டம் இறங்கும் இடத்துக்கு கொண்டு வந்தனர். அருளாளி பூப்பந்தை உருட்டி முதலில் குண்டம் இறங்கியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.



இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குண்டம் திருவிழாவில் கலந்து கொண்டனர். அம்மனை நினைத்து வேண்டுதல் வைக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறி வருவதால் தொடர்ந்து விரதம் இருந்து குண்டம் இறங்கி வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஆனைமலை திமுக நகர செயலாளர் டாக்டர் செந்தில், திமுக பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார், முனனாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...