வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணி வேகமெடுக்கும் என எதிர்ப்பார்ப்பு

வரும் 26ம் தேதி, நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500 ரயில்வே மேம்பாலங்கள், கீழ்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா, திறப்புவிழா மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடக்கவுள்ளது.


கோவை: கோவை சந்திப்புக்கு அருகிலுள்ள, வடகோவையில் மேலும் இரண்டு நடைமேடைகளை அமைத்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், வடகோவை மற்றும் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த, முறையே ரூ.7.5 கோடி மற்றும் ரூ.24 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், வரும் 26ம் தேதி, நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500 ரயில்வே மேம்பாலங்கள், கீழ்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா, திறப்புவிழா மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடக்கவுள்ளது.

விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, காணொளியில் இவற்றைத் துவக்கி வைக்கிறார். இந்த பட்டியலில், ஆகஸ்டில் துவங்கி நடந்து வரும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுப் பணியும் சேர்க்கப்பட்டுள்ளது. வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுப் பணி, வரும் மே 31க்குள் முடிவடையுமென்று, தெற்கு ரயில்வே, செய்திக்குறிப்பில் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பணிகள் அதற்குள் முடியுமா என்பது சந்தேகமாகவுள்ளது. பிரதமர் துவக்கி வைக்கும் திட்டப்பணிகள் பட்டியலில் இந்த ஸ்டேஷனும் சேர்ந்திருப்பதால், இனியாவது சீரமைப்பு வேலைகள் வேகமெடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...