கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில மாணவ எழுச்சி மாநாடு

தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில மாணவ எழுச்சி மாநாடு கோவையில் நடைபெற்றது. மாநாட்டின் துவக்கமாக மாணவர்களின் எழுச்சி பேரணி கோவை கோட்டைமேடு வின்செட் ரோட்டில் துவங்கியது.

 

இதனை சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில்  சி.எப்.ஐ மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம், புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராகவும், பெண்களின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இறுதியாக பேரணி மாநாடு நடைபெறும் நல்லாயன் சமூகக்கூடத்தில் நிறைவு பெற்றது.



பின்னர், கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எஸ்.முஸ்தபா தலைமையில் மாநில மாணவ எழுச்சி மாநாடு துவங்கியது. சி.எப்.ஐ மாவட்ட தலைவர் கே.பீர் முகமது வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் தேசிய தலைவர் பி.வி சுஹைப், எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், எழுத்தாளர் மதிமாறன், சி.எப்.ஐ தேசிய குழு உறுப்பினர் நூரா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டின் இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துர்ரஹ்மான் நன்றியுரை கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...