தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி

மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறுதல் மற்றும் அதை பாதுகாத்தலின் முக்கியதுவத்தை பற்றி வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சியில் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி சிறப்புரை ஆற்றினார்.


கோவை: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் பதிப்புரிமைப் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் பல்கலைக்கழக அண்ணா அரங்கில் முதுநிலை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

19.02.2024 (திங்கள்கிழமை) அன்று நடைபெற்ற தொடக்கவிழாவில், முதுநிலை மாணவர்கள், காப்புரிமைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.நடராஜன் வரவேற்பு உரையாற்றினார். முதுநிலை கல்வித் துறை தலைவர் முனைவர் என்.செந்தில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.



பிமி, காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணைக்கட்டுப்பாட்டாளர் சென்னை, தனது உரையில், மாணவர்கள் தங்கள் புதுமையான கண்டுபிடிப்புகளை மதிப்பிடுவதற்கு இலவச இணையதளம் பயன்படுத்துவது மற்றும் கண்டுபிடிப்பு படிவத்தை எவ்வாறு சரியாக தயாரிப்பது என்பதை அவர்களுக்கு விளக்கினார்.

வெ. கிரிஜா, காப்புரிமை வழக்கறிஞர் மற்றும் IPaatEntiti IP இன் நிறுவனர், தன் உரையில் இந்தியாவில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளின் அம்சங்களை விளக்கி, பல்வேறு வகையான உரிமைகளை பற்றி மாணவர்களின் மத்தியில் உரையாற்றினார்.

முனைவர் வெ. கீதாலட்சுமி துணைவேந்தர், மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறுதல் மற்றும் அதை பாதுகாத்தலின் முக்கியதுவத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார். இணைப் பேராசிரியர் முனைவர் கணேசன் நன்றி கூறினார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...