சாட்டையடித்து பிழைக்கும் மக்கள் பிளேடால் கீறி ரத்த காயங்களுடன் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு


சாட்டையடித்து பிழைக்கும் சுமார் 30 குடும்பங்கள் கோவை காந்திபார்க் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலையோரத்தில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.



இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமிற்கு வந்தவர்கள் பிளேடால் தங்களது கைகளை கீரியும், சாட்டையினைக் கொண்டு தங்களை அடித்துக் கொண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இதயைடுத்து, அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்து அழைத்துச் சென்று மனு அளிக்க செய்தனர்.

இது குறித்து சாட்டையடித்து பிழைப்பவர்கள் கூறும்போது, மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் தங்கி வந்த நிலையில் கடை உரிமையாளர்கள் தற்போது விரட்டுவதாகவும், வாழ வழியின்றி தவிப்பதாகசம் வேதனை தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...