தண்ணீர் வரத்து குறைவால் இன்று முதல் கவியருவி மூடல் - வனத்துறை அறிவிப்பு

அருவிகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணிகள் குளிக்க உகந்த சூழல் வரும் போது கவியருவி மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி ஆழியார் அணை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள குரங்கு அருவி என்ற கவியருவி சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக விளங்கி வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வறட்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் கவியருவியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் ஆழியார் கவியருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து உள்ளதால், வனத்துறை சார்பில் கவியருவியை மூட உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று (பிப்.15) முதல் ஆழியார் கவியருவி மூடப்பட்டது.

மீண்டும் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணிகள் குளிக்க உகந்த சூழல் வரும் போது கவியருவி மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து அறியாமல் வந்து சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி உடன் திரும்பிச் செல்கின்றனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...