உடுமலை அருகே குருமலை பகுதியில் மலை கிராமத்தில் சிறப்பு ஆதார் சேவை முகாம்

ஆதார் சிறப்பு முகாம் பெரிதும் உதவிகரமாக உள்ளது எனவும், இதே போன்று அரசின் திட்டங்கள் எங்கள் கிராமத்தை வந்தடைந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனவும் மலைவாழ்மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்குள்ள பொறுப்பாரு, கோடந்தூர், ஆட்டுமலை, தளிஞ்சி, தளிஞ்சி வயல், குருமலை, குலிப்பட்டி, மேல்குருமலை, காட்டுப்பட்டி, கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றான ஆதார் அட்டை புதிதாக எடுத்தல், திருத்தம், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றுக்காக உடுமலை பகுதிக்கு வரவேண்டிய சூழல் இருந்தது. இதற்காக அடர்ந்த வனப்பகுதியில் உயிரை பணயம் வைத்து பயணித்து அடிவார பகுதிக்கு வருகை தந்து வாகனத்தை பிடித்து உடுமலைக்கு வர வேண்டிய நிலை இருந்தது.

அதுவும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருந்தது. இதனால் ஆதாரை மையமாகக் கொண்ட பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றிதழ் பெறுவதிலும் தடங்கல்கள் நிலவி வந்தது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத்தொடர்ந்து மலைவாழ் கிராமங்களில் ஆதார் சிறப்பு முகாம் அமைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் குருமலை பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. நாளை குலிப்பட்டி பகுதியில் நடைபெற உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ஆதார் சிறப்பு முகாம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதனால் நாங்கள் பெருத்த சிரமத்துக்கு இடையில் உடுமலைக்கு சென்று வர வேண்டிய நிலை மாறி உள்ளது.அதுமட்டுமின்றி வயதானவர்கள் குழந்தைகள் எளிதாக பதிவு செய்ய முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்று அரசின் திட்டங்கள் எங்கள் கிராமத்தை வந்தடைந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...