கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாமில் பங்கேற்க மாணவர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமியில் வரும் பிப்.15 ஆம் தேதி கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமியில் வரும் பிப்.15 ஆம் தேதி கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் கோயம்புத்தூர் மாவட்டம் கலை மற்றும் அறிவியல் துறை மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை மாணவ, மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும், கல்வி கடன் கிடைப்பதற்காக, கலெக்டர் தலைமையில் டி.ஆர்.ஓ.,வை உறுப்பினர் செயலராக கொண்டு, 10 அலுவலர்கள் கொண்ட, முதன்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, கல்வி கடன் வழங்குவதை கண்காணித்து, முறைப்படுத்தி வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், இதற்கென தனிப்பிரிவு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...