உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் 31.5.2024 ஆம் தேதி வரை உரிய இடைவெளிவிட்டு பாசன நீர் வழங்கப்பட உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீரை பிரதான கால்வாயில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் வழியாக நான்கு மண்டலங்களாக பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் இன்று முதலாம் மண்டலத்திற்கான பாசன நீர் திருமூர்த்தி அணையில் இருந்து இன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இன்று முதல் 31.5.2024 ஆம் தேதி வரை உரிய இடைவெளிவிட்டு பாசன நீர் வழங்கப்பட உள்ளது.



திருமூர்த்தி அணையிலிருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் பிரதான கால்வாயில் திறந்துவிடப்பட்டது.

இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மடத்துக்குளம் திருப்பூர்-பல்லடம் தாராபுரம் மற்றும் காங்கேயம் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.



தண்ணீரை திருப்பூர் மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்தார்.

செயற்பொறியாளர் மகேந்திரன், காஞ்சித்துரை, உதவி பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெயக்குமார், முத்துசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



திருமூர்த்தி அணையில் தற்போது அணையின் நீர்மட்டம் மொத்தம் 60 அடி கொள்ளளவில் 55.15 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...