பிஜேபிக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓபிஎஸ் செய்கிறார் - சின்னியம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் பிஜேபி இல்லாத கூட்டணி தான் அமையும். பிஜேபி தவிர்த்து யாரு வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். அதிமுக யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை யாருக்காகவும் தட்ட வேண்டிய சூழலும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு முன்னதாக தொழில் அமைப்புகளுடன் கலந்து ஆலோசிக்கும் கூட்டமானது நடைபெற்றது.



நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபிக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓபிஎஸ் செய்து வருகிறார். திருடனுக்குப் பிறகு ஓபிஎஸ் பிஜேபியில் இணைந்து விடுவார். பிஜேபியுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். அதிமுகவைப் பொறுத்தவரையில் பெரிய கூட்டணி மகத்தான கூட்டணி அமையும்.

தமிழகத்தில் பிஜேபி இல்லாத கூட்டணி தான் அமையும். பிஜேபி தவிர்த்து யாரு வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். அதிமுக யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை யாருக்காகவும் தட்ட வேண்டிய சூழலும் இல்லை. அதிமுகவை நோக்கி தான் கட்சிகள் வரும்.

திமுக சார்பாக தேர்தல் அறிக்கைக்காக கனிமொழி தமிழகம் முழுவதும் பயணம் செய்கிறார். ஒரு நான்கு செவுத்துக்குள் இருந்து கொண்டு மனுக்களை பெற்று வருகிறார். அதிமுகவை போன்று ஆடிட்டோரியங்களில் மனுக்களை வாங்க தற்போது திமுகவும் செய்து வருகிறது. மக்கள் எங்களுடன் மனு கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்களைத் தடுத்து வருகின்றனர். 17 வருடங்களாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக இதுவரை என்ன தமிழகத்துக்கு செய்தது அதிமுக மாநில உரிமைக்காக பாடுபட்டது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது. திமுக எல்லை தாண்டி மீன்பிடித்தது தொடர்பாக குறைவான சம்பவங்களே அதிமுக ஆட்சியில் நடைபெற்றது.

அதிமுகவை கண்டால் இலங்கை அரசிற்கு பயம் அப்போது இருந்தது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியதற்கு மக்களை பாதிக்கின்ற எந்த சட்டமாக இருந்தாலும் அதிமுக எதிர்க்கும். சிறுபான்மையின மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும் அதை அதிமுக எதிர்க்கும். பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டுள்ள இந்தியாவை பதில் சிவில் சட்டத்தை அனுமதிக்க முடியாது.

அண்ணாமலை பொறுத்த மட்டில் பல கருத்துகளை கூறி மாட்டிக் கொண்டு வருகிறார். அவரின் கருத்துக்கள் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக பல் குறித்து கூற வேண்டாம் என நினைக்கிறேன். படாமல் என சொல்லியது எப்படி சென்று கொண்டிருக்கிறது. அதுபோல அதைக் கூறுபவர்களும் லேகியம் இருப்பவரை போலத்தான் இருப்பார்கள். அதிமுகவைப் பொறுத்த மட்டில் திமுகவின் பகையாளி பாஜகவும் பகையாளி அதிமுகவை எதிர்க்கும் போது என தெரிவித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...