மதுக்கரை அறிவொளி நகரில் நகைகளுக்கு அட்டை பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

இன்று (பிப்.9) மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் உணவருந்த வெளியே வந்த நிலையில், கம்பெனிக்குள் திடீரென தீ பற்றி உள்ளது. இதனை அறிந்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.


கோவை: கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் நகைகளுக்கு அட்டை பெட்டி தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 130க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று (பிப்.9) மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் உணவருந்த வெளியே வந்த நிலையில் கம்பெனிக்குள் தீ பற்றி உள்ளது.



இதனை அறிந்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவியுள்ளது.

இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.



உடனடியாக கோவைப்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



மின் கசிவால் தீ பற்றியதாக கூறப்படும் நிலையில், உரிய விசாரணைக்குப் பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். இந்த கம்பெனியை சுற்றி வேறு சில கம்பெனிகளும் இருப்பதால் அவர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.



இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த வண்ணம் உள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...