கோவை வடவள்ளி இளைஞர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவு

ஆபாசம் படம் பார்ப்பதாகக் கூறி பலரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்த புகாரில், சபரி என்பவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அதன் நகல் சிறையில் உள்ள சபரியிடம் நேற்று (பிப்.7) புதன்கிழமை வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் ஆபாசம் படம் பார்ப்பதாகக் கூறி பலரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக மாநகர சைபா் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சைபா் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், கோவை வடவள்ளியைச் சோ்ந்த சபரி (23) உள்ளிட்ட 10 போ், சைபா் குற்றப் பிரிவு போலீஸார் என்றும், ஆபாச படம் பார்த்ததுக்கு வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும் என்றுகூறி பலரையும் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து சபரி உள்ளிட்ட 10 பேரையும் போலீஸார் அண்மையில் கைது செய்தனா். இந்தக் கும்பலுக்கு தலைமையாக சபரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில், சபரி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையருக்கு சைபா் குற்றப் பிரிவு போலீஸார் பரிந்துரை செய்தனா்.

இதைத் தொடா்ந்து சபரி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அதன் நகல் சிறையில் உள்ள சபரியிடம் நேற்று (பிப்.7) புதன்கிழமை வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...