சாலையோர வியாபாரிகள் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் வழியாக முதலமைச்சருக்கு விண்ணப்பம்

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டத்தை மாவட்டம் முழுவதும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக முதலமைச்சருக்கு விண்ணப்பம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில்,குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1. 2015ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டம் அரசிதழில் வெளியிட்டு 02.11.2015 முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களால் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மாவட்டம் முழுவதும் இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

2. மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வியாபாரச் சான்று மற்றும் ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டை காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வழங்க வேண்டும்.

3. அடையாள அட்டை முழுமையாக வழங்கப்பட்டு வணிகக் தேர்தல் நடத்திட வேண்டுவதுடன் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதை உறுதிப்படுத்தி வணிகக் குழுவை முறையாக செயல்படுத்த வேண்டுகிறோம்.

4. வணிகக்குழுவிற்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்திடவும். பணியாளர்கள் ஒதுக்கீடு செய்து அலுவலகம் முறையாக செயல்பட வேண்டுகிறோம்.

5. தெரு வியாபாரிகளிடம் வணிக கட்டணம் வசூலிக்க டெண்டர் விடுவதை கைவிட வேண்டுவதுடன், திட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வணிக கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டுகிறோம்.

6. வணிகக்குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.

7. தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வங்கி மூலம் கடன் வழங்கவும் தொழிற்சங்க ஒத்துழைப்புடன் முறையாக திரும்ப செலுத்துவதற்கான பெரும் திட்டம் கொண்டு வந்து அனைத்து தெருவோர வியாபாரிகளுக்கும் பயனடையும் விதத்தில் செயல்படுத்த வேண்டுகிறோம்.

8. தெரு வியாபார பொருட்களை இரவில் பாதுகாப்புடன் வைப்பதற்கான இட வசதி செய்து தர வேண்டுகிறோம்.

9. உள்ளாட்சிப் பகுதிகள் அனைத்திலும் இந்தத் திட்டம் அமல்படுத்த வேண்டும். ஆனால், கிராம ஊராட்சி, பெரும்பாலான பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே. அனைத்து கிராம ஊராட்சி, பேரூராட்சிகளில் இதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...