சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விவசாய கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதில் பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார். அவரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி சாலையில் ஆத்துக்கிணத்துபட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சிவராஜ் என்ற விவசாயி தோட்டத்து கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகின்றது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு கிணற்றில் விழுந்த கார் மற்றும் உயிரிழந்த பாலசுப்பிரமணியம் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து குடிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடுமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு கிணற்றில் விழுந்த கார் மற்றும் உயிரிழந்த பாலசுப்பிரமணியம் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து குடிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடுமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.