குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த முதல்வருக்கு கு.இராமகிருட்டிணன் நன்றி

தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக கொண்டிருப்பதை தந்தை பெரியார் திராவிட கழகம் வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளது.


கோவை: தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளாவது, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், திபெத், போன்ற வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக நிறைவேற்றும் சட்டம் அந்த நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கும், இலங்கையில் இருந்து வரும் தமிழ் இந்துக்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்று புதிய குடியுரிமை திருத்த சட்டம் சொல்கிறது.

இலங்கைக்கு சென்று ஈழத் தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளில் வீடு கட்டித் தருகிறோம், சாலை அமைத்து தருகிறோம், அவர்களுக்கு புனரமைப்பு பணிகளை செய்து தருகிறோம் என்று நாடகம் நடத்தும் மோடியின் பாஜக அரசு அதே ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் குடியுரிமை இல்லை என்று அறிவிக்கின்றது.

கிறிஸ்துவ நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து செல்லும் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அந்த நாடுகளின் குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்துவ நாடுகளில் குடியேறிய பிழைப்புக்காக சென்ற பார்ப்பனர்கள் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஆகவும், இங்கிலாந்து நாட்டின் பிரதமராகவும் கிறிஸ்தவ நாடுகள் அனுமதித்திருக்கிறது. ஆனால் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...