தாராபுரம் அருகே உப்பாறு அணையில் போராட்டத்தில் பங்கேற்ற பெண் சாமியாடியதால் பரபரப்பு

நான்காம் நாள் கட்ட போராட்டமாக உப்பாறு அணை உள்ள சேற்று தண்ணீரில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 400க்கும் மேற்பட்டோர் போராட்ட பந்தலில் இருந்து சாரை சாரையாக சென்று அணை நீரில் இறங்கி அணைக்கு தண்ணீர் வேண்டும் என கோசம் எழுப்பினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் மற்றும் நிர்வாக உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் பல கட்ட போராட்டம் நடத்தி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து நான்கு நாட்களாகியும் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டது.



இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் உப்பாறு அணை உட்பகுதியில் இறங்கி அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வகையில் நான்காம் நாள் கட்ட போராட்டத்தில் உப்பாறு அணை உள்ள சேற்று தண்ணீரில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அணை நீரில் இறங்க வேண்டாம் என வலியுறுத்தி இருந்தபோதிலும் 400க்கும் மேற்பட்டோர் போராட்ட பந்தலில் இருந்து சாரை சாரையாக நடந்து வந்து அணை நீரில் இறங்கி அணைக்கு தண்ணீர் வேண்டும் என கோசம் எழுப்பினர்.



அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சாரதி என்ற பெண்மணிக்கு சாமி வந்து ஆடினார். அணைக்கு தண்ணீர் தராத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சாமி ஆடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...