விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்காத வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

மேலும் பெரிய தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் குட்டி பெண் யானையை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். வனவிலங்குகள் விவசாய நிலங்களை நாசம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வராமல் விவசாயிகளை வனத்துறையினர் அவமதித்துள்ளதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை எனவும், கூடுதல் நிவாரண தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...