பவானி ஆற்றின் குறுக்கே கேளர அரசு அணை கட்ட தடையாணை வாங்க தமிழக அரசு தவறிவிட்டது- பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து, முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, கோவை காந்திபுரம் பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழு ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தி மு க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பவானி தடுப்பணை தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன், கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தடுப்பணை கட்ட தடையாணை பெறாத காரணத்தினால் கேரள அரசு மேலும் தடுப்பணைகள் கட்ட வாய்ப்பாக அமைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தடுப்பணைகள் கட்டுவதற்கு தடையாணை பெற வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர்,  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் பவானி ஆற்றில் கேரள அரசு தண்ணீர் எடுக்க எந்தவித வரையறையும் இல்லாத நிலையில், கேரள அரசு தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.

பவானி தடுப்பணை விவகாரத்தில் முறையாக வழக்கு நடத்தாத தமிழக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் வருகின்ற 30-ம் தேதி கோவையில் அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.

மேலும் இந்த விவாகரம் தொடர்பாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் ஏப்ரல் முதல்வாரத்தில் கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...