கவுண்டம்பாளையத்தில் பொங்கல் பரிசு தொகை ரூ.1,20,000 திருடிய ரேஷன் கடை ஊழியர் கைது

120 பேருக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காமல், காலதாமதம் செய்து வந்த ரேஷன் கடை ஊழியர் மதியரசுவை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியரசு ( வயது 35). இவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த வாரம் பொங்கல் பரிசு தொகையாக 841 பேருக்கு தலா ரூ.1000 வழங்க ரூ.8,41,000 ஒப்படைக்கப்பட்டது.

இதில் 721 பேருக்கு பணத்தை முறையாக கொடுத்து விட்டார். மீதமுள்ள 120 பேருக்கு பணம் வழங்கவில்லை. அந்த பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த 17ஆம் தேதி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் காலதாமதம் செய்து வந்தார். அவரை பிடித்து பணத்தை பெற முயற்சி செய்தபோது தலைமறைவாகிவிட்டார்.

அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் ரேஷன் கடை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ் வழக்கு பதிவு செய்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காமல் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த மதியரசுவை நேற்று கைது செய்தார். பின் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...