சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால கோவிலில் பசுவின் உருவ பொம்மை வைத்து விவசாயிகள் சிறப்பு வழிபாடு

சலகெருது ஆட்டம், உருமி இசையுடன் தேவாராட்டம் ஆடி விவசாயிகள் சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர். இதில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்ட மால கோவிலில் காணும் பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள் தங்களது கால்நடைகள் நீண்ட காலமாக நலமுடன் வாழ பசு மாடு உருவ பொம்மை வைத்து நேர்த்திக்கடன் செய்து விவசாயிகள் சிறப்பு வழிபாடு செய்தனர்.



முன்னோர்கள் கூறிய அறிவுரையின் படி பல ஆண்டுகளாக கால்நடைகள் நலமாய் வாழ உருவ பொம்மை வைத்து வழிபாடு செய்தால் கால்நடைகள் நீடுழி வாழ இறைவன் கை கொடுப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.



மேலும் இதற்கிடையில் பாரம்பரியமான சலகெருது ஆட்டம், உருமி இசையுடன் தேவாராட்டம் ஆடி சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர்.



கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...