கிழவன் காட்டூர் கிராமத்தில் பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் விழா, பாரம்பரியமான முறையில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் அறிவுரைபடி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதாக மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் பாரம்பரியமான முறையில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி அறிவுரை படி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து, திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி கூறுகையில், வருடம் முழுவதும் விவசாயத்துக்கு பெரிதும் உதவியாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாடுகளை அலங்கரித்தும் 18 வகை உணவுகள் படைத்து பாரம்பரியமான முறையில் மாட்டு பொங்கலை கொண்டாடி வருகிறோம்.



மேலும் விவசாயிகளுக்கு உற்ற துணையாக உள்ள ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் தான். விவசாயிகளுக்கான தனி நிதிநிலை போடப்பட்டு விவசாயிகளின் நலனில் அக்கறையுள்ள தலைவராக உள்ளார் என தெரிவித்தார்.

இந்தவிழாவில், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மேற்கு மாவட்ட கொள்கை விளக்க அணி தலைவர் ராமலிங்கம், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு, ஊடக பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், பாமக நிர்வாகிகள் தண்டபாணி, குமார், ஹரிஹரன், கார்த்திக் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...