திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, தளி, ஜல்லிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய முறையில் சூரிய பொங்கல், பூமாதேவி பொங்கல், மாட்டுப் பொங்கல் என மூன்று வகை பொங்கல் வைத்து கிராம மக்கள் மகிழ்ந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, தளி, ஜல்லிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கல் பாரம்பரியமான முறையில் சூரிய பொங்கல், பூமாதேவி பொங்கல், மாட்டுப் பொங்கல் என மூன்று வகை பொங்கல் வைத்து வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, வருடம் முழுவதும் கால்நடைகள் விவசாயிகளுக்காக உழைத்து வரும் நிலையில், மாட்டுப்பொங்கல் தினத்தன்று கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக முன்னோர்கள் கூறிய இந்த அறிவுரையின் படி மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுக்கு பிடித்த உணவு வகைகள் வழங்கி மாட்டுப்பொங்கலை பாரம்பரியமான முறையில் கொண்டாடி வருகின்றோம்.

மேலும், தற்சமயம் பெரும்பாலும் அனைவரும் கலப்பின மாடுகளை வைத்துள்ள நிலையில் நாட்டு மாடுகள் வளர்க்க அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். இதற்கு தமிழக அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். இந்தநிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, வருடம் முழுவதும் கால்நடைகள் விவசாயிகளுக்காக உழைத்து வரும் நிலையில், மாட்டுப்பொங்கல் தினத்தன்று கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக முன்னோர்கள் கூறிய இந்த அறிவுரையின் படி மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுக்கு பிடித்த உணவு வகைகள் வழங்கி மாட்டுப்பொங்கலை பாரம்பரியமான முறையில் கொண்டாடி வருகின்றோம்.
மேலும், தற்சமயம் பெரும்பாலும் அனைவரும் கலப்பின மாடுகளை வைத்துள்ள நிலையில் நாட்டு மாடுகள் வளர்க்க அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். இதற்கு தமிழக அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். இந்தநிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.