கோவையில் இருந்து அயோத்தி ராமர் கோவில் வரை இருசக்கர வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி மறுப்பு

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்லவும் அனுமதி கொடுக்கும் அரசு ஏன் அயோத்தி ராமர் கோவில் செல்ல அனுமதி கொடுப்பதில்லை என கோவை பாஜக விருந்தோம்பல் குழுவின் மாவட்ட துணைத் தலைவர் இந்துஜா காஞ்சி கேள்வி எழுப்பினார்.


கோவை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவை பாஜக விருந்தோம்பல் குழுவின் மாவட்ட துணைத் தலைவராக உள்ள இந்துஜா காஞ்சி என்பவர் இருசக்கர வாகனத்தில் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ராமர் கோவில் இருந்து அயோத்தி ராமர் கோவில் வரை கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள இருந்தார்.



இந்த நிலையில் கோவில் முன்பாக நின்று கொண்டிருந்த காவல்துறை இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்துஜா காஞ்சி கூறும் பொழுது கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்லவும் அனுமதி கொடுக்கும் அரசு ஏன் எங்களுக்கு கொடுப்பதில்லை என கேள்வி எழுப்பினார்.



இந்த பிரச்சனையில், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். அனுமதி கடிதம் கொடுத்தவுடன் பரிசீலனை செய்யப்படும் எனவும், பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...