தாராபுரத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில், சமத்துவ பொங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.



வண்ண வணண கோலங்கள் இட்டு, மண் பானையில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் வழங்கினார்கள். மேலும் பொங்கல் வைத்த மகளிர் அணியினரை உற்சாக படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...