திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜிடம் சட்டமன்ற கூடுதல் செயலாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரல்

நாயகர்-கலைஞர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில், சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், மேடையில் அமர்ந்திருந்த ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜை கீழே போய் அமருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர்-கலைஞர் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.



அப்போது சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் மேடையில் அமர்ந்திருந்த ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கீழே போய் அமருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதனால் கோபமடைந்த திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ செல்வராஜ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தன்னை மன்னித்து விடுமாறு சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், திமுக எம்எல்ஏவிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த மன்னிப்பு கேட்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் MLA அவர்களை உரையாற்ற அழைத்தபோது பேசுவதற்கு விருப்பமில்லை என்று கோபித்துக் கொண்டு மேடையின் பின்புறமாக வேக வேகமாக கிளம்பி சென்றுவிட்டார்.

நான் மேடைக்கு வரவில்லை. பேசவும் இல்லை என்றும் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.



அதன் பின்பு அரசு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து மீண்டும் மேடைக்கு அழைத்து வந்து பின்னர் உரையாற்றினர்.



இந்த சம்பவம் கருத்தரமும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க கூடிய அளவில் இருந்தது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...