சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டம்

தமிழக அரசை கண்டித்தும், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும், பணிமனை முன்பு சட்டையை கழட்டி அரை நிர்வாண கோலத்தில் தரையில் அமர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


கோவை: கோவை-திருச்சி சாலை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் தரையில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று முதல் தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை-திருச்சி சாலை சுங்கம் பகுதியிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சிஐடியு தொழிற்சங்க கூட்டமைப்பினர் இணைந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசை கண்டித்தும், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும், பணிமனை முன்பாகவே சட்டையை கழட்டி அரை நிர்வாண கோலத்தில் தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.



காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறியபோதும், அதனை ஏற்காத தொழிற்சங்கத்தினர் அதே பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...