உடுமலை அருகே திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 34-வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு

மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், யோகா, தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழாவில் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து, பின்னர் குரு மகானிடம் அருளாசி பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் தென்கயிலை உலக சமாதான ஆலயம் உள்ளது. உலக பொது நிர்வாகம், பொது நாணயம், பொதுமொழி, ஓர் உலக சமதர்ம சமத்துவ நல்லாட்சி உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக நிறைவு பெற 34-வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி கடந்த மாதம் 17- ம் தேதி தொடங்கியது.

குரு மகான் பிரமிடு வடிவிலான அறையில் அமர்ந்து 21 நாட்கள் தவ வேள்வி மேற்கொண்டார். வேள்வியின் நிறைவு விழா நடைபெற்றது. குருமகான் பிரவணாலயத்தில் இருந்து வெளியில் வந்தார். அதைத் தொடர்ந்து ஒரு நிமிட அமைதி, அஷ்ட தீபம் ஏற்றுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. உலக சமாதான அறக்கட்டளை பொதுச்செயலாளர் கே.எஸ்.சுந்தரராமன் வரவேற்புரை ஆற்றினார்.

குருமகா பீடாதிபதி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை உரையாற்றினார். பொள்ளாச்சி தொகுதி எம்.பி கு.சண்முகசுந்தரம் முன்னிலை உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பிரபஞ்ச நல வாழ்த்து, உலக அமைதிக்கான ஒரு நிமிட அமைதியும் நடைபெற்றது.

பின்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதி எ.எ.நக்கீரன் சிறப்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து நூல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து குருமகான் அருளுரை வழங்கினார்.



அத்துடன் மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், யோகா, தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் குரு மகானிடம் அருளாசி பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உலக சமாதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...