கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதியோர் உதவி தொகை கேட்டு வந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ராமாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பழனியமமாள் என்ற மூதாட்டி, முதியோர் உதவித் தொகை கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது மயங்கி விழுந்த மூதாட்டியை அங்கிருந்த ஊழியர்கள் 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: வாரந்தோறும் திங்கள் கிழமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது கோவை ராமாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பழனியமமாள் (81) என்ற மூதாட்டி, முதியோர் உதவித் தொகை கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்க வந்துள்ளார்.

அப்போது மூதாட்டி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.



பின் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உதவியுடன் 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



ஏற்கனவே இதுபோல் மனு அளிக்க வந்த முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் தற்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பானது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...