தாராபுரத்தில் 7000 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் பகுதியில் 7000 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்களின் நலனை காப்பாற்றும் திட்டமாக இதை குறிப்பிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில், பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மற்றும் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து, ரூபாய் 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு அட்டைகளை சுமார் 7000 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவம் மற்றும் கல்வி துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டு, மக்களை தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் 48 போன்ற பல நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...