உடுமலையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

பேரணியில் பங்கேற்ற மாணவிகள் மித வேகம் மிக நன்று, தலைக்கவசம் உயிர்கவசம், படியில் பயணம் நொடியில் மரணம் போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, உடுமலை வக்கீல்கள் சங்கம், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறை, ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

பேரணிக்கு உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார். அதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. பின்னர் பேரணியை சார்பு நீதிபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



பேரணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை, மார்கெட் சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அப்போது மாணவிகள் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், மித வேகம் மிக நன்று, தலைக்கவசம் உயிர்கவசம், படியில் பயணம் நொடியில் மரணம் போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.

அத்துடன் போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பேரணியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் கே.விஜயகுமார், ஆர் மீனாட்சி, வக்கீல் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன், அரசு வழக்கறிஞர்கள் சேதுராமன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட வக்கீல்களும், போலீஸ் சார்பில் சட்டம் ஒழுங்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவராஜ், போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்ட போலீசார் ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...