கோவை சாய்பாபா காலனி பகுதியில் பரசுராம் என்பவருக்கு சொந்தமாக அபிராமி பர்னிச்சர்ஸ் என்னும் பர்னிச்சர் கடை உள்ளது. இக்கடையில் இன்று காலை 11 மணியளவில் எதிர்பாராதவிதமாக இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தீயணைப்புத் துறை அலுவலகங்களில் இருந்து இருவாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அனுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அக்கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் எரிந்து நாசமானது.
இரண்டாவது மாடியில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தீயணைப்புத் துறை அலுவலகங்களில் இருந்து இருவாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அனுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அக்கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் எரிந்து நாசமானது.
இரண்டாவது மாடியில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.