கோவையில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீவிபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசம்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் பரசுராம் என்பவருக்கு சொந்தமாக அபிராமி பர்னிச்சர்ஸ் என்னும் பர்னிச்சர் கடை உள்ளது. இக்கடையில் இன்று காலை 11 மணியளவில் எதிர்பாராதவிதமாக இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தீயணைப்புத் துறை அலுவலகங்களில் இருந்து இருவாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அனுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் அக்கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் எரிந்து நாசமானது. 

இரண்டாவது மாடியில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...