சாலை விபத்தில் இரு வாலிபர்கள் பலி

கோவை குனியமுத்தூரை அடுத்த பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜாபர் (20) மற்றும் அசாருதீன் (20). இவர்கள் இருவரும்  கரும்புக்கடை பகுதியில் பாரம் தூக்கும் பணி செய்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு பணி முடிந்து ஆத்துப்பாலம் வழியாக, ஜாபர் தனது வாகனத்தில் அசாருதீனை அழைத்துக் கொண்டு செல்லும்போது, சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது தூக்கியெறியப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், போக்குவரத்து புலனாய்வு துறை (மேற்கு) போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு வாலிபர்களின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...