குள்ளம்பாளையத்தில் உள்ள தேங்காய் தொட்டி சுடும் ஆலைக்கு எதிர்ப்பு - வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தேங்காய் தொட்டி சுடும் ஆலையில் வாட்டாட்சியர் நேரில் ஆய்வு நடத்தினார். புதுப்பிக்கும் பணி நடைபெற்றால், ஆலை சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர், இதுதொடர்பாக வரும் ஐந்தாம் தேதி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் தேங்காய் தொட்டிகளை சுடும் ஆலை சட்ட விரோதமாக இயங்கி வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் நோய் தொற்று ஏற்படுவதாகவும் கால்நடை மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ள காரணத்தால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆலை சிறிது காலம் மூடப்பட்டது.



இந்நிலையில் மீண்டும் அந்த ஆலை புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் ஆலை இயங்குவதாகவும் கோரி ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் இன்று முற்றுகையிட்டனர்.



விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வட்டாட்சியர் இன்று நேரில் அந்த ஆலையை ஆய்வு மேற்கொண்டார். ஆலையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர், வரும் ஐந்தாம் தேதி விவசாயிகள் மற்றும் ஆலை உரிமையாளருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் ஜனவரி 10ஆம் தேதி அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...